top of page
Search

உடற்கூறியல் அறையில் உடலாய் நான் - Sushmitha S - Batch of 2018

  • Writer: Prose and Poetry
    Prose and Poetry
  • Nov 8, 2021
  • 1 min read

செங்கீற்று உள்வர என் அருகிலிருந்த

அசைவற்ற சகமனிதனைக் கண்டு வியந்தேனே!


அடர்காடாக இருந்த கருங்கூந்தல் இன்று

பராமரிப்பின்றி சருகாக காய்ந்து உதிர்ந்ததேனோ?


வண்ணங்களைப் பிரித்து பகுத்தறிந்த கண்கள்

வண்ணம் இழந்து காட்சி அளிப்பதேனோ?


இரவும்பகலும் அயராது உழைத்த மூக்கு

அயர்ந்து தன்பணி நிறுத்தி இளைப்புற்றதேனோ?


புகழ்ந்தும் பழித்தும் கிடந்த வாய்

தன் பச்சோந்தி தன்மையை மாற்றியதேனோ?


அறுசுவையுண்டு இசையின்றி ஆடிய நா

இன்று தன் ஆட்டத்தை நிறுத்தியதேனோ?


அணிகலன் அலங்கரிக்க பிரகாசித்த கழுத்து

பயிரில்லா வயலைப் போல வெறுமையாகியதேனோ?


பணத்தால் நிரம்பி வழிந்த கைகள்

இங்கே வெற்றுப் பாத்திரமாக இருப்பதேனோ?


பட்டாடை உடுத்தி நெகிழ்ந்த தேகம்

ஆண்பெண் பேதமின்றி உடையின்றி கிடப்பதேனோ?


காடுகரையெல்லாம் சுற்றித் திரிந்த கால்கள்

இப்படி வெடிப்புற்று பாலைவனமாக வறண்டதேனோ?


சாதி மதம் பதவியென பிதற்றியவர்கள்

அனைவரும் ஒன்றென சமமாக படுத்திருப்பதேனோ?

உலகமென்னும் நாடகமேடையில் அவ்வளவுதான் வாழ்க்கையென

புரிந்து அங்குள்ள உடலோடு

உடலாய் நானும் நின்றேனே!

 
 
 

Recent Posts

See All
வீறு கொண்டெழு மனமே- Abhinaya B

வீறு கொண்டெழு மனமே வீறு கொண்டெழு மனமே நீ! விழுந்துவிடுவாய் எனசொன்னோர் முன் வாழ்ந்துக்காட்ட! வீறு கொண்டெழு மனமே நீ!...

 
 
 
SHATTERED- Anusha - 2019 Batch

SHATTERED I wake up as usual, but something feels different. I seem to be floating, and I can’t see my hands or feet! Looking down, I see...

 
 
 
DANGLING - Manigandan - 2018 Batch

As we sat with our legs dangling off the bridge, I looked at her and asked “Do you know how old this bridge is?” She turned, looked at me...

 
 
 

Comments


©2022 by I PSGIMSR I All rights Reserved

bottom of page